1.எம் ஜென்மபூமி தாயே!
எம் கர்மபூமி நீயே
எம் புண்யபூமி தாயே!
குலதெய்வமென்றும் நீயே
வாழ்வாம் மலர்தனை உன்
திருவடிதனில் படைத்தோம்
ஏழேழு பிறவிதோறும்
உனையே வணங்கி வாழ்வோம்
உனதேவல் செய்துயர்வோம்
(எம் ஜென்மபூமி)
உணவாகி நீருமாகி
உடலத்துடன் கலந்தாய்
ஊனாகி உதிரமாகி
எம்மில் நிறைந்து நின்றாய்
உனக்காகவே எம்வாழ்வு
உனக்காகச் சாவுமேற்போம்
உனக்காகத் தொண்டுசெய்தே
வளமோங்கும் நிலை சமைப்போம்
(உனதேவல்)
ஒப்பற்ற இமயமுந்தன்
ஒளிவீசும் மகுடமாகும்
முப்புறமும் சூழும் கடல்கள்
ஓயாது மணிகள் தூவும்
இணையற்ற நாடெம் நாடு
என்றே முழக்கம் செய்வோம்
கணமேனும் உனை மறந்தே
உயிர் வாழச் சகியமாட்டோம்
(உனதேவல்)
நீ காத்த நெறிமுறைகள்
காலத்தை வென்ற அமுதம்
நீ உறையும் ஆலயங்கள்
தர்மத்தின் மையமாகும்
பண்பின் பாதகை யேந்தி
புவியெங்கும் விஜயம் செய்வோம்
பண்பாட்டின் தென்றலாகி
உள்ளங்கள் குளிரவைப்போம்
(உனதேவல்)
தாய்ப்பாச மேங்க வைப்போம்
தனயர்களிணைய வைப்போம்
தாய்நாடு யர்த்தும் உணர்வை
நெஞ்சங்கள் தோறும் வளர்ப்போம்
கைம்மாறு கருதிடாமல்
கடமைகளாற்ற வந்தோம்
கணமேனும் துஞ்சிடாமல்
பயணம் தொடர்ந்து செல்வோம்
(உனதேவல்)
Subscribe to:
Post Comments (Atom)
The King Casino Company - Ventureberg
ReplyDeleteIt was born 바카라사이트 in 1934. 출장안마 The wooricasinos.info Company offers jancasino luxury hotels, If you don't have a poker room in your house, then you'll find a poker room ventureberg.com/ in the