4.வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
பாரத வந்தே மாதரம்! ஜெய பாரத வந்தே மாதரம்!
தாயின் தாளில் வாழ்வாம் மலரால்
அர்ச்சனை செய்ய விரைகின்றோம்
தளர்ந்திட மாட்டோம் பெரும்புயல் வரினும்
வழிபட விரைந்து செல்கின்றோம் (வந்தே)
இமய பர்வதம் சிரசாகிடவே
எத்தனை உய்ந்த நெற்றியடா!
இணையடி தன்னை கடல் கழுவிட
எத்தனை அழகிய தேசமடா!
பச்சைப் பசுமை ஆடையணிந்தாள்
இறைவி தன்னைப் பாடுகிறோம்! (வந்தே)
வான்புகழ் கங்கை கழுத்தினிலே மாலை
எத்தனை மாலைகள் நதியாலே
விந்திய மாலையும் சாத்புராவம்
ஒட்டயானமாய் அணி செய்ய
வஜ்ரக் கரமாய் ஸஹ்யாத்ரி மலை
வீர பாக்கியம் விளக்கிடுது (வந்தே)
எவரெதி ரேயும் தலைகுனியாத
தன்மானத்தின் வடிவமடா!
எங்கள் தாயைத் தாக்கிய படைகள்
மண்ணுடன் மண்ணாய் மறைந்ததடா!
எதிரியை வென்று வாகை சூடினால்
ஏற்புடைய அன்னை வாழியவே! (வந்தே)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment