மலையில மகுடம் வச்சு
கடலில பாதம் வச்சு
மாகாளி உருவில் நின்றாய் எங்கள் ஆத்தா! காளி ஆத்தா
மாகாளி உருவில் நின்றாய் எங்கள் ஆத்தா! உன்னை நான்
பாராத்தாய் என்றழைப்பேன் எங்கள் ஆத்தா
எல்லையில எதிரிவந்து தொல்லை தரும் வேளையில
எல்லையம்மன் உருவில் நீயும் வாளெடுத்து நிக்கையிலே! பாரதாத்தா!
இல்லையங்கு எதிரிகள் ஓடிவிட்டார் அடி ஆத்தா!
உழைப்பு மிகுந்திருந்தால் உணவுக்குப் பஞ்சமில்லை
வாரி வழங்கிடும் எங்கள் ஆத்தாபாரதாத்தா! உன்னை நான்
மாரியம்மன் என்றழைப்பேன் எங்களாத்தா
கல்விக்கதிபதி நீ, கலைமகள் உன்பேரு
கற்றிடுவார் உலகத்து மக்களெல்லாம் உன்னிடத்தில்! பாரதாத்தா
கற்ற உந்தன் மக்களெல்லாம் சென்றிடவார் எட்டுத்திக்கும்
எத்தனை வடிவெடுத்து எங்களை நீ ஆண்டாலும்
அத்தனை வடிவிலுமே காண்பதுன்னை எங்களாத்தாபாரதாத்தா
பித்தனாய் உன் புகழை பாடிடுவேன் எங்கள் ஆத்தா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment