Tuesday, May 25, 2010

தேவலேகமே வியக்கும் எம்

தேவலேகமே வியக்கும் எம்
அருமை தாயகம்
ஆதியந்தமற்றதிந்த அமர பூமி பாரதம் (தேவ)

கிரேக்க ஹூண யவனர்கள் புயலைப் போலத் தாக்கினர்
பஞ்ச நதிக்கரைதனில் தோல்வி கண்டு சாய்ந்தனர்
பஞ்சு போல பறந்தனர் காற்றிலே கலந்தனர்
கால வெள்ளப் போக்கிலே கடலுடன் கரைந்தனர்
பாரதத்தின் வீர சக்தி பாரிலே ஜொலித்தது
பாரிலே ஜொலித்தது (தேவ)

பாரதத்தின் மண்ணிலெங்கும் சுயநலம் படர்ந்தது
பாராக்ரமம் வளர்த்திடும் மரபுகள் தகர்ந்தன
போக வசதி ஆசையில் மூழ்கி வாழ்ந்த வேளையில்
துரோகிகள் மலிந்தனர் சுதந்திரம் அழிந்தது
தேசபக்தி ஜோதியேற்றி புத்துணர் வெழுப்புவோம்;
புத்துணர் வெழுப்புவோம் (தேவ)

உணவு உடைகள் ஜாதிகள் வழிபாட்டில் வேற்றுமை
உள்ளத்திலே கோவில் கொண்ட தர்மத்திலே ஒற்றுமை
முந்தையரின் உதிரம் நம்மை ஒரு குடும்ப மாக்குது
ஒருமையை உடைக்கவரும் மடமையை அகற்றுவோம்
ஒன்றுபட்ட பாரதத்தின் எழுச்சி கீதமே இது
எழுச்சி கீதமே இது (தேவ)

அதர்ம சக்தி ஓங்கி எங்கும் தலைவிரித்து ஆடுது
அந்நியர் வலை விரித்து வேட்டையும் நடக்குது
அன்னை அலறி அழும் குரல் நெஞ்சையே <<உருக்குது.
ராஷ்ட்ரபக்தி நறுமணம் நாட்டிலே நிரப்புவோம்
நாட்டினை எழுப்புவோம் இன்றைய பணி இது
இன்றைய பணி இது (தேவ)

No comments:

Post a Comment