Thursday, December 23, 2010

புது வரலாற்றினைப் படைக்ககிறான் புத்துயிர் எங்கும் அளிக்கிறான்

25.
புது வரலாற்றினைப் படைக்ககிறான்
புத்துயிர் எங்கும் அளிக்கிறான்
பாரதத் தாயின் பாத மலரிலே
மலராகிடும் இளைஞன்
இளம் வயதினிலே காடேகி
இன்னுயிர் சீதையை இழக்கின்றான்
இலங்கை அரக்கன் கொடுங்கோலழித்தே
அறத்தின் அரசை அமைக்கின்றான்
மறத்தின் தீமை தகர்க்கின்றான் (புது)

மாரதர் முன்னே கதறுகிறான்
மானம் இழந்தே பாஞ்சாலி
மௌனம் காக்கும் முதியோரிடையே
காளை கண்ணன் வருகின்றான்
கற்பினுக் கபயம் தருகின்றான் (புது)

பெருங்கடல் கடந்து செல்கின்றான்
பேரரசாட்சி அமைக்கின்றான்
புவியில் பாரதக் கொடியினை நாட்டி
புகழைக் காலில் குவிக்கின்றான்
புனிதத் தாயைப் பணிக்கின்றான் (புது)

பசியால் குழந்தை மடிகின்றது
பட்டமகிஷியும் துடிக்கின்றால்
சுதந்திர தேவியின் புனிதம் காக்க
பாலியாகின்றான் பிரதாபனும்
ஒளியாகின்றான் காரிருளில் (புது)

தூக்கு மேடையே மணமேடை
தாக்கி யழிப்போம் அன்னியரை
எங்கள் அன்னை கைவிலங்கொடிப்போம்
என்று கிளர்ந்தது புரட்சிக் கனல்
ஒன்றி மகிழ்ந்து வரலாற்றில் (புது)

No comments:

Post a Comment