புனித நன்னாளில் இன்று பூஜை செய்கிறோம்
பூஜையாகிற நல்ல மலர்களாகிறோம்
இந்த நாள் வரை நான் தந்ததோர் பணம் குருவே
உந்தன் பாதத்தில் இன்று நனே அர்ப்பணம்
ஜெயஜெய பகவா குருவே ஜெயஜெய பகவா
ஜெயஜெய பகவா கொடியே ஜெயஜெய பகவா
என்று தோன்றினை எனவே கூறவும் இயலா
தொன்மை வாய்ந்தவா குருவே தொழுதொழுகின்றோம்
எந்த நாளும் உந்தன் புகழ் ஓங்கி உயர்ந்திட குருவே
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்
(ஜெயஜெய பகவா)
தியாகத்தின் உரு நீ, குருவே தூய்மையின் உரு நீ
தர்மம் காக்கும் போரில் சாட்சி ஆகி நின்றவன் நீ
தர்மம் காக்கவே நாங்கள் அணி திரண்டுள்ளோம் அதனால்
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்
(ஜெயஜெய பகவா)
குருதி சிந்தியே விடுதலைக் கோட்டை கட்டினார் அந்தக்
கோட்டையில் உச்சியில் அழகாய் உன்னை நாட்டினார்
உறுதி கொண்டோம் உலகரங்கில் உன்னை உயர்த்திட அதனால்
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்
(ஜெயஜெய பகவா)
செல்வத்தை தந்தேன் உடலின் உழைப்பினை தந்தேன்
திறமைகள் அனைத்தும் உனக்கே அர்ப்பணம் செய்தேன்
என்ன தந்த போதும் மனம் அமைதியற்றதால் குருவே
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்
(ஜெயஜெய பகவா)
No comments:
Post a Comment