Tuesday, December 21, 2010

ஹிந்து இன்றே ஒன்றுபடு

ஹிந்து இன்றே ஒன்றுபடு
ஹிந்து இன்றே ஒன்றுபடு
ஹிந்து இன்றே ஒன்றுபடு

பரம்பெருள் ஒன்றே பலவல்ல
சக்தியும் ஒன்றே இரண்டல்ல
ஹரியும் ஹரனும் புத்தனும்
ஒன்றின் பலப்பல வடிவங்கள்
சிந்தாந்தங்கள் ஏராளம்
சித்தர்களும் எண்ணற்றோர்
எனினும் அனைத்தை ஒன்றாய் இணைந்த
பாவன கங்கை ஒன்றேதான் (ஹிந்து)
ஏழை எளியோர் நலிந்தோரை
ஏற்றமளித்தே உயர்ந்திடுவோம்
அனைவருள்ளும் உறங்கி வாழும்
அமர சக்தியை எழுப்பிடுவோம்
மேலோர் கீழோர் இங்கில்லை
அனைவரும் அன்னையின் ஆருயிர் மைந்தர்
உடன் பிறந்தோர் உறவினரே (ஹிந்து)
வழிப்பறி செய்த ஓர்வேடன்
வானவர் நிலைக்கு உயர்ந்தவன்
படகோட்டியினை தழவிய ஒருவன்
சோதர பாசம் உணர்த்தியவன்
மீனவப் பெண்ணின் மகன் வந்தான்
வேதங்களையே வகுத்தளித்தான்
பிறவியிலே உயர்வு தாழ்வுகளில்லை
என்றே உணர்த்திய நாடு இது. (ஹிந்து)

கம்பன் பாடிய ராமகதை
வில்லின் அற்புத பாரதமும்
வீடுகள் தோறும் எதிரொலி செய்யும்
ஈடிணையில்லாத நாடு இது
நாயன்மாரும் ஆழ்வாரும்
வடலுõர் வள்ளல் பெருமானும்
ஆன்மநேயமாம் ஒருமையுணர்வால்
அமுதம் பாய்ச்சிய நாடு இது (ஹிந்து)

No comments:

Post a Comment