19
சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி
கிராம மனைத்தும் தவ பூமி
சிறுமியர் ரெல்லாம் தேவியின் வடிவம்
சிறுவ ரனைவரும் ராமனே
சிறுவ ரனைவரும் ராமனே
கோயிலைப் போலே உடல்கள் புனிதம்
மாந்தரனைவரும் உபகாரி
சிங்கத்துடனே விளையாடிடுவோம்
ஆவினம் எங்கள் அன்புத்தாய்
காலையில் ஆலய மணிகள் முழங்கும்
கிளிகள் கண்ணன் பெயர் பாடும்
(சிறுமியர்ரெல்லாம்)
உழைப்பால் விதியை மாற்றிடும் மண்ணிது
உழைப்பின் நோக்கம் பொது நலமே
தியாகமும் தவமும் கவிகள் பாட்டின்
கருவாய் அமையும் நாடிது
கங்கை போலே தூய ஞானம்
ஜீவ நதியெனப் பாய்ந்திடும்
(சிறுமியர்ரெல்லாம்)
போர்க்களந் தன்னிலே எங்கள் வீரர்
புனித கீதையை ஓதுவர்
ஏர்முனையின் கீழ் தவழ்ந்து வருவாள்
எங்கள் அன்னை சீதையே
வாழ்வின் முடிவாய் விளங்குவதிங்கு
இறைவன் திருவடி நீழலே
(சிறுமியர்ரெல்லாம்)
புண்ணிய பூமி பாரதம்..
ReplyDelete