21.
மலை வளையும், தலை குனியும்,
நதி நிற்கும் தடை கண்டே
எனின் இளம் ஒடுங்காது
அபாய்தில் நடுங்காது
குரு கோவிந்தன இரு புதல்வர்
சின்னஞ்சிறுவர் இளந்தளிர்கள்
எனின் சிங்கத்தின் குட்டியினர்
தர்மத்தின் தீரக்காவலர்கள்
அடல் ஏறாகச் சீறிட்டார்
கார்கித்தார் கால பைரவன் போல்
""ஒருக்காலும் தலை வணங்கோம்
எந்நாளும் கொள்கை விடமாட்டோம்
எம் தேசம் எங்கள் உயிராகும்
எம் தர்மம் எங்கள் உயிராகும்
குரு தமோசர் உயர் ஆவர்
ஸ்ரீ குருகிரந்தம் உயிராகும்''
ஜோராவர் வீறுடன் முழங்க
பத்தேசிம்மன் கர்ஜனை செய்தான்
""சுவர் தனையே எடுப்பிடுக
கல்லாலே மூடி அடைத்திடுக
எம் மூச்செல்லாம் உணர்ச்சி தரும்
எங்கள் பிணமும் எழுச்சி தரும்
இந்த சுவர்கள் முழக்கமிடும்
என்றென்றும் வீர கோஷமிடும்
எங்கள் தாய் நாடு வென்றிடுக
எம்மாருயிர் தர்மம் வென்றிடுக
குருதசமேசர் வென்றிடுக
ஸ்ரீ குருகிரந்தம் வென்றிடுக
No comments:
Post a Comment