Tuesday, December 21, 2010

பாரத நாட்டைப் பாரிலுயர்த்திட ஒன்றுபடு ஒன்றுபடு

14.
பாரத நாøட்டைப் பாரிலுயர்த்திட
ஒன்றுபடு ஒன்றுபடு
ஹிந்து தர்மமிது ஓங்கி உயர்ந்திட
ஒன்றுபடு ஒன்றுபடு

ஆயிரமாண்டுகள் அன்னியன் ஆட்சியில்
அடிமைபட்டதை எண்ணிவிடு
வேற்றுமை ஒன்றே காரணமென்று
சற்றும் சரித்திரம் கண்டுவிடு (பாரத)

ஆயிரம் ஜாதிகள் நம்மில் உண்டு
ஆயினும் ஒரன்னை மக்களன்றோ?
பேதங்கள் வந்தாலும் பேசி முடிப்போம்
போரிடும் தன்மையை விட்டுவிடு (பாரத)

நந்தனை தந்தவர் நம்மை பிரிவது
எந்த வகையிலும் தீமையன்றோ?
சிந்தனை செய்தவர் வீடு திரும்பிட
சந்ததம் நல்வழி கண்டிடுவோம் (பாரத)

No comments:

Post a Comment