Thursday, December 23, 2010

லட்சியப் பாதையில் முன்னேரிவரும் வீரா பின்னோக்காதே

27.
லட்சியப் பாதையில் முன்னேரிவரும்
வீரா பின்னோக்காதே
துணிவினை இழந்து விடாதே

ஆண்மையின் வடிவம் வீரமகன் நீ
ஆற்றலில் உனக்கினை இல்லை
தூய்மையின் உருவம் தியாகச் சின்னம்
தெய்வத்துணை உனக்குண்டு
கானல் நீராம் மோக மாயையில்
கணமும் மயங்கி விடாதே (துணிவினை)

எத்தனை தூரம் எத்தனை காலம்
என்றே சோர்ந்து விடாதே
உலகம் என்னுடன் வருமோ என்று
உள்ளம் ஏங்கி விடாதே
லக்ஷிய மெய்திட உடல் பொருள் ஆவியியை
அளித்திட தயங்கி விடாதே (துணிவினை)

உன்னை நம்பியே நாடு வாழுது
நீயே நல்லாதாரம்
உனது தோளுடன் தோளிணைந்திட
உணர்ந்து வருகுது தேசம்
ஒய்வொளி வின்றி தர்மப் பாதையில்
ஏகிட மறந்து விடாதே (துணிவினை)

No comments:

Post a Comment