Tuesday, December 21, 2010

சிவாஜி மன்னா! நின் நினைவு வீறு தந்திடும்

22.
சிவாஜி மன்னா! நின் நினைவு வீறு தந்திடும்
சிவாஜி மன்னா! நின் நினைவு வீறு தந்திடும்

அபார சக்திவாய்ந்த வீரர்
தன்னலத்தில் மூழ்கினார்
அன்னியன் கீழ் அடிமையாகி
அஞ்சிகெஞ்சி வாழ்ந்தனர்
அச்சம் போக்கி சுதந்திரத்தின்
வேட்கை தந்தனை
(சிவாஜி)
அன்னையர் தம் கற்பிழந்து
அவலமாகி நின்றவனர்
ஆலயத்தின் அழிவு கண்டு
உள்ளம் நொந்து வாடினர்
ஆண்மையூட்டி சிம்மாக்கி
இழிவகற்றினை
(சிவாஜி)

சிறு படையாங் பகப்படையை
புழுதியாக மாறினை
சிறுவரை மாவீராக்கி
ரிய நாடெழுப்பினை
சீறிப்பாயும் ராம பாண
மாக வந்தனை
(சிவாஜி)

ஹிந்துவின் உறக்கம் நீக்கி
மெய்யுணர் வளித்தனை
சொந்த அரசு நிறுவிக் காட்டி
நெஞ்சு விம்ம வைத்தனை
தர்ம சக்தி வென்று தீரும்
என்று ணர்த்தினை
(சிவாஜி)
ஒற்றையாக உறுதி பூண்டு
காவிக் கொடியுயர்த்தினை
வெற்றிவேலைப் போலத் தாக்கி
இடர்மலை தகர்த்தனை
வெற்றி வாகை சூடி வீர வாழ்வு தந்தனை
(சிவாஜி)

No comments:

Post a Comment