18.
ஒண்ணுதான் ஒண்ணுதானே நம்ம நாடு தம்பி
ஒண்ணுதான் ஒண்ணதானே
ஒண்ணுதானே நம்மநாடு எண்ணிப்பாரு நல்லா தம்பி
(ஒண்ணுதான்)
கங்கக் கர ராமனுக்கு ராமேசர மண்ணு தெய்வம்
செங்குட்டுவ சேரனுக்கோ இமயமலை கல்லு தெய்வம்
ரமேசர மண்ணு தெய்வம் இமயமலக் கல்லு தெய்வம்
(ஒண்ணுதான்)
பாண்டிநாட்டு ஆண்டாளுக்கு கண்ணனேதான்
எண்ணமெல்லாம்
ராஜபுத்ர மீரவுக்கும் கண்ணனேதான் எண்ணமெல்லாம்
ஆண்டாலுக்கும் மீரவுக்கும் கண்ணனேதான்
எண்ணமெல்லாம்
(ஒண்ணுதான்)
செந்தமிழின் முதலெழுத்தா வள்ளுவரு சொன்ன "அ'னா
எந்த மொழிக்காரருக்கும் முதலெழுத்தா ஆனதனால்
செந்தமிழின் முதலெழுத்தும் எந்தமொழி முதலெழுத்தும்
(ஒண்ணுதான்)
அங்கக்கிங்க பேதமில்ல, ஊரு மொத்தம் ஒரேசனம்
நல்லாச் சொல்லு நாலுதரம், நாடு மொத்தம் ஒரே இனம்
ஊரு மொத்தம் ஒரே சனம், நாடு மொத்தம் ஒரே இனம்
(ஒண்ணுதான்)
இந்திய மொழிகளில் முதல் அமந்துள்ள எழுத்துக்கள் எல்லாம் அ.🖒
ReplyDelete